தமிழக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு: திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

By ஜி.செல்லமுத்து

திருச்சி: தமிழக ஆளுநரின் திருச்சி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மற்றும் கருமண்டபம் தேசிய கல்லூரியில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இன்று காலை திருச்சி வருகை தர உள்ளார். இந்த நிலையில் ஆளுநர் தமிழக நலனுக்கு எதிராக இருப்பதாகவும், தெய்வப் புலவர் திருவள்ளுவரை கொச்சைப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி, ஆளுநர் செல்லும் திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை துணை ஆணையர் அன்பு தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE