சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் கே.கே.நகர், வேப்பேரி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அமலாக்கத் துறையினர் நகரின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கே.கே.நகரில் உள்ள பிரபல ஜவுளிக் கடை உரிமையாளர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் அடுக்குமாடி கட்டிட வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை தொடர்ந்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE