மெட்ரோ ரயிலில் ஜனவரியில் 84.63 லட்சம் பேர் பயணம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாதத்தில் (ஜனவரியில்) மட்டும் 84 லட்சத்து 63 ஆயிரத்து 384 பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக ஜன.12-ம் தேதி 3 லட்சத்து 64 ஆயிரத்து 521 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37 லட்சத்து 43 ஆயிரத்து 885 பேரும், பயண அட்டைகளை பயன்படுத்தி 37 லட்சத்து 92 ஆயிரத்து 912 பேர், டோக்கன்களை பயன்படுத்தி 15, 456 பேரும், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 8,792 பேரும், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 9 லட்சத்து 2 ஆயிரத்து 336 பேரும் மெட்ரோரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் - நல்லூர் சுங்கச்சாவடி வரையிலான விரைவான போக்குவரத்து அமைப்பின் (எம்ஆர்டிஎஸ்) சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய அல்மோன்ட்ஸ் குளோபல் இன்ஃப்ரா-கன்சல்டன்ட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE