தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை: டி.டி.வி.தினகரன் தகவல்

By செய்திப்பிரிவு

காரைக்குடி: தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

காரைக்குடியில் அமமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்பு டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டணி குறித்து சில கட்சிக ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். பிரதமரை தேர்ந் தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம் பெறும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த பின்னர், அதை ஏற்றுக் கொள்வதும், ஏற்காததும் தமிழக மக்கள்தான்.

இதை பற்றி கட்சி தலைவராக கருத்து சொல்வது நாகரிகமாக இருக்காது. முதல்வர் வெளிநாடு செல்வதில் கருத்து வேறுபாடு கிடையாது. தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை கொண்டு வர வேண்டும் என்பது என் விருப்பம். தேர்தல் நேரத்தில் எங்களது கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க செல்ல வேண்டும் என்பதால், தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் நான் முடிவு எடுக்கவில்லை. அதே நேரம் நிர்வாகிகள், தொண்டர்கள் என்னை போட்டியிடச் சொல் கின்றனர். இதுகுறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.

தன்னை முதல்வர் ஆக்கியவர், ஆட்சி சரியாக நடக்க உதவிய ஓபிஎஸ், ஆட்சியை காப்பாற்றிய மத்திய அரசு ஆகிய அனைவருக்கும் துரோகம் செய் தவர் பழனிசாமி. அவருக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பர். ‘இண்டியா’ கூட்டணி சுக்கு நூறாக உடைந்துவிட்டது. தேர்தல் நேரத்தில் அந்த கூட்டணியில் மு.க.ஸ்டாலின் மட்டுமே இருப்பார் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி மற்றும் நிர் வாகிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்