திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் காதலன் உயிரை மாய்த்துக்கொண்டார். இதனால் மனமுடைந்த அவரது காதலியும் தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் தாலுகா, நஞ்சுகொண்டாபுரம் மேகலபாடி அரியூர் சாலையைச் சேர்ந்தவர் ஏழுமலை. கூலித் தொழிலாளி. இவரது மகள் சுகன்யா (21) செவிலியர் படிப்பு முடித்துள்ள சுகன்யா வீட்டில் இருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கார் ஒட்டுநர் சரத்குமார் (23) என்பவரை சுகன்யா, கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் ஏழுமலை யின் வீட்டுக்குச் சென்ற சரத்குமார், சுகன்யாவை காதலிப் பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறி பெண் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏழுமலை குடும்பத் தினர், சரத்குமாரை வெளியேற்றியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த சரத்குமார் கடந்த 17-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கேள்விப்பட்ட சுகன்யா, 2 நாட்களாக சாப்பிடாமல் இருந்தாராம். இந்நிலையில் மன வேதனையில் இருந்த சுகன்யாவும் திங்கள்கிழமை காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார்.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago