திருச்சியில் இன்று விசிக மாநாடு: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு இன்று (ஜன.26) மாலை நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் `வெல்லும் ஜனநாயகம்' மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது.

கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமை வகிக்கிறார். இதில்,திமுக தலைவரும், முதல்வரு மான மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுப் பேசுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருகை உறுதி செய் யப்படவில்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டின் முழுமையான வடிவமைப்பு, ஒருங்கிணைப்பு பணிகளை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE