ஜெ. நகைகள் குறித்த கோர்ட் உத்தரவு முதல் ராகுல் யாத்திரையில் பரபரப்பு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.23, 2024

By செய்திப்பிரிவு

ஜெ. நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்க‌ளை தமிழக‌ அரசிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘ஜெயலலிதாவின் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வரை நகைகள் மற்றும் வெள்ளி பொருட்க‌ளை கர்நாடக அரசு ஏலம் விட அனுமதிக்க முடியாது. அதற்கு பதிலாக அந்த நகைகளை கர்நாடக அரசு, தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். கர்நாடக அரசின் உள்துறை செயலர் மற்றும் போலீஸ் அதிகாரி மேற்பார்வையில் தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் வழங்க வேண்டும். இந்த நகைகளை சரிப்பார்த்து பெற்றுக்கொள்ள தமிழக அரசு கூடுதலாக அதிகாரி ஒருவரையும் நியமிக்க வேண்டும். ஜெயலலிதா மீதான வழக்கை நடத்திய செலவினங்களுக்காக கர்நாடக அரசுக்கு தமிழக அரசு ரூ. 5 கோடி வழங்க வேண்டும்’ நீதிமன்றம் உத்தரவிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE