மண்டல வாரியாக ‘மக்கள் நீதி மய்ய பேரிடர் மீட்புக் குழு’ - மநீம செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

சென்னை: மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் எதிர்கொண்டு வருவதை மனதில்கொண்டு மண்டல வாரியாக ‘மக்கள் நீதி மய்ய பேரிடர் மீட்புக் குழு’ உருவாக்குதல் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:

இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் மாற்றுத் திறனாளிகள், ஆட்டோ தொழிற்சங்கம், மற்றும் மகளிர் உள்ளிட்ட 200 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்கள்.இதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் புதிய மாவட்ட செயலாளர்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதன்பிறகு மாணவர்களை சந்தித்த மநீம தலைவர், அரசியலின் மாற்றம் மாணவர்களின் கைகளில்தான் உள்ளது என்றும் மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் எடுத்துரைத்தார் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE