தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீதான நடவடிக்கைகள் என்னென்ன? - அரசு விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, இதுவரை மேற்கொள்ளப்பட்டுள் நடவடிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக, சைலேஷ் குமார் யாதவ், கபில் குமார் சி. சரத்கர், ஆகிய இந்திய காவல் பணி அலுவலர்கள், மகேந்திரன், லிங்கத்திருமாறன் ஆகிய காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் இரண்டு ஆய்வாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடியில் கடந்த ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, தமிழக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தவறான தகவல்களை சில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசால் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:-

முன்னதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் சைலேஷ் குமார் யாதவுக்கு பணிமூப்பு அடிப்படையில் டிஜிபியாக தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியது. அவர் வகித்து வரும் பதவியிலேயே அவர் தொடர்ந்து பணியாற்றி வருவார் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது, தென் மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவுக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE