கச்சத்தீவில் பிப். 23, 24-ல் திருவிழா

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அந்தோணியார் ஆலயத் திருவிழா பிப்ரவரி 23-ம் தேதி மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடர்ந்து, திருச்ஜெபமாலை, இரு நாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை, இரவு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனி நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பிப்ரவரி 24-ம் தேதி காலை 7.30 மணியளவில் சிறப்புத் திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெற்று, விழா நிறைவடையும் என இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானபிரகாசம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE