தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டிச. 30, 31-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 30, 31-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னைவானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் இன்று (டிச. 28) தமிழக கடலோர மாவட்டங்களில் சிலஇடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வரும் 29, 30-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் சில இடங் களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 31-ம் தேதி முதல் ஜன. 2-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 30, 31-ம்தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில்லேசான மழை பெய்யும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்