ரூ.6,000 நிவாரணம் அப்டேட் முதல் கருணாநிதி சிலை சர்ச்சை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ டிச.15, 2023

By செய்திப்பிரிவு

‘ரூ.6,000 நிவாரணத்தை ரொக்கமாக வழங்க தடை இல்லை’: ‘மக்களுக்கு வெள்ள நிவாரணம் உடனடி தேவை’ என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘இடைக்கால உத்தரவு பிறப்பித்து, அதனை தாமதப்படுத்த முடியாது’ என கூறி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டது. இதன்மூலம், ரூ.6,000 நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்க தடை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், ‘நிவாரணம் வழங்குவதை தாமதப்படுத்துவது மக்கள் நலனுக்கு உகந்ததல்ல. உண்மை பயனாளிகளுக்கு நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்’ என்று அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 5-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அன்றைய தினம் நிவாரணம் வழங்கியது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE