வேலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து முதற்கட்டமாக 2 லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 4 மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் இருந்து முதற்கட்டமாக 2 வாகனங்களில் உணவு மற்றும் அத்தியாவசியமான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று வழியனுப்பி வைத்தார்.
முதற்கட்ட நிவாரண உதவிகளாக மாவட்டத்தில் இருந்து தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் மூலம் பிரெட் பாக்கெட்டுகள்-2,020, பன் வகைகள்-3,200, குடிநீர் பாட்டில்கள்-5,400, பிஸ்கெட் பாக்கெட்டுகள்-10,853, அரிசி மூட்டைகள்-5 மற்றும் போர்வைகள்-1,950, துண்டுகள்-780, வாளி மற்றும் குவளைகள்-1,500, குளியல் சோப்புகள்-100, பற்பசைகள்-100, பல்துலக்கிகள்-100, பாய்கள் மற்றும் படுக்கை விரிப்புகள்-650 ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது (பொறுப்பு) அப்துல் முனிர், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago