சென்னை வெள்ளம்: அடையாறு கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை நீடிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத அதி கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை பெருநகரில் மேலும் 6 பேர் உயிரிழந்தனர். அடையாறு கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பகல் 12 மணி நிலவரப்படி போக்குவரத்து நிலை, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த தகவலை சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: நிலைமை இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டதால், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து பிரதான சாலைகள் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் : புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.திருமங்கலம் 100 அடிசாலை மழைநீர் தேக்கம் காரணமாக எஸ்டேட் சாலை – பார்ச் சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது.100 அடி சாலை விநாயகபுரம் முதல் கோயம்பேடு வரை மழைநீர் தேக்கம் காரணமாக MMDA,ரசாக் கார்டன், NSK நகர் வழியாக திருப்பிவிடப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் ஒருங்கிணைப்புடன் நீர்தேங்கியுள்ள முக்கியப் பகுதிகளில் நீரகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலும் DDRT குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து செயல்படுகின்றன. சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவின்(DDRTs) முக்கிய நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்:

நீர் தேங்கியதால் மூடப்பட்ட சுரங்கப் பாதைகள்:கணேசபுரம் சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை- அரங்கநாதன் சுரங்கப் பாதை (ஒருவழி பாதை), CP சாலை சுரங்கப்பாதை,வியாசர்பாடி சுரங்கப்பாதை, திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப் பாதை, கோயம்பேடு புதிய சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளன. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் விழுந்த 465 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இறப்புகள் : 6 - இறந்தவர்களின் விவரம்:

நீரில் மூழ்குதல் / மின்சாரம் தாக்குதல் மற்றும் மருத்துவ உதவிகள் விபரம்: H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொருக்குப்பேட்டை, காரனேஷன் நகரில், மரம் விழுந்து காயமடைந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ரமேஷ், வ/43, த/பெ.பெருமாள் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால், அவரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு : அடையாறு கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து, சென்னை பெருநகர காவல்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

காவலர் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள்: துணை ஆணையர்கள் ஆயுதப்படை மற்றும் மோட்டார் வாகனம் ஆகியோர்கள் தலைமையில் மூன்று தனிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் சென்னைபெருநகர காவல் எல்லையில் உள்ள காவலர் குடியிருப்புகளுக்குச் சென்று அங்கு மழை நீர் தேங்கியிருப்பதை அப்புறப்படுத்தியும், மேலும் அவர்களுக்கு வேண்டிய தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறைக்கு உதவி கோரி வந்த தொலைபேசி அழைப்புகள்: 04.12.2023 முதல், சென்னை பெருநகர கட்டுப்பாட்டறையில் மீட்பு நடவடிக்கை, உணவு, குடிநீர், தங்குமிடம், வாகனம், போக்குவரத்து மற்றும் மருத்துவ உதவி கோரி, 1419 தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டு, அனைத்து அழைப்புகளுக்கும் சென்னை பெருநகர காவல் குழுவினர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மூலம் தேவையான உதவிகள் செய்யப்பட்டன.

அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏன்? - இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறும்போது, “செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2500 கனஅடி தண்ணீர் மட்டும் தற்போது திறக்கப்படுகிறது. ஆனால், அடையாறு ஆற்றினுடைய மற்ற பகுதிகளான ஆதனூர், கீழ்க்கட்டளை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மொத்தமாக, அடையாறு ஆற்றில் 37,000 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அந்த 37,000-ல், 2500 கனஅடி மட்டுமே செம்பரம்பாக்கம் ஏரியினுடைய பங்கு. மற்றவை பிற பகுதிகளில் இருந்து வந்துகொண்டிருப்பவை. ஆனால், படிப்படியாக அந்த தண்ணீரின் அளவும் குறைந்து கொண்டே வருகிறது” என்று விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > 866 இடங்களில் வெள்ளம், மீட்பு பணிகளில் 75,000 பேர், 4% பகுதிகளில் மின்தடை: தமிழக அரசு அப்டேட் @ மிக்ஜாம் பாதிப்பு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்