சென்னையில் இன்று வி.பி.சிங் சிலை திறப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் வி.பி.சிங்குக்கு நிறுவப்பட்ட சிலையை இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். காலை 11 மணிக்கு மாநில கல்லூரியில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிலையை திறக்கிறார். அதைத் தொடர்ந்து, 11.15 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். சிறப்பு விருந்தினராக உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார்.

இதுதவிர, வி.பி.சிங்கின் மனைவி சீதாகுமாரி, மகன்கள் அஜயா சிங், அபய் சிங் மற்றும்அமைச்சர்கள், எம்.பி.க்கள்,எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE