இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 15 பேர் சென்னை வருகை

By செய்திப்பிரிவு

சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 64 மீனவர்கள் கடந்த அக்.14-ம் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டிவந்து மீன்பிடித்ததாகக் கூறி 64 பேரையும் இலங்கை கடற்படை யினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர்.

அவர்களை விடுவிக்க மத்திய,மாநில அரசுகள் எடுத்த முயற்சியினால், 64 மீனவர்களையும் கடந்த நவ.9-ம் தேதி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.பின்னர், 63 பேரும் இலங்கையில்உள்ள இந்தியத் தூதரக அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதில், முதல்கட்டமாக 15 மீனவர்கள் விமானம் மூலம் நேற்றுஅதிகாலை சென்னை வந்தனர். தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள், பாஜகவினர் அவர்களை வரவேற்றனர். பின்னர், தமிழகஅரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

மீதமுள்ளவர்களில் 12 பேர் 23-ம் தேதியும், 21 பேர் 24-ம் தேதியும் சென்னை வரவுள்ளனர். மீனவர் முருகனுக்கு மட்டும் 2முறை கடல்தாண்டி மீன் பிடித் ததாக கூறி 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE