தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது

By செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னை எழும்பூர்-தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து நவ.10, 12 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06001) புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு தூத்துக்குடியை அடையும். மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து நவ.11, 13 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்புகட்டண ரயில்(06002) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய நிறுத்தங்களில் நின்றுசெல்லும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE