மது குடிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு: அண்ணாமலை புகார்

By செய்திப்பிரிவு

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: புதிதாக டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு குடிப்பழக்கம் கேடு விளைவிக்கும் என்று டாஸ்மாக் ஊழியர் அறிவுரை கூறுவார் என்கிறார் அமைச்சர் முத்துசாமி. மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்.

சராசரியாக மது குடிப்போரின் எண்ணிக்கை 80 லட்சமாக இருந்தது. தற்போது 90 லட்சமாக உயர்ந்துள்ளது என்று ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறது. இதுதான் திமுகவின் சாதனை. தமிழ்நாட்டை முழுவதுமாக குடிநாடாக மாற்றுகிறார்கள். வரும் தேர்தலில் திமுக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE