மன்னார்குடி, திருச்சி, மங்களூரு ரயில் சேவை 3 நாட்கள் மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை ரயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சில ரயில்களின் சேவை 3 நாட்களுக்கு பகுதியாகவும், சில ரயில் சேவைகள் முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டுகின்றன.

இதன்படி, சென்னை எழும்பூர்- மன்னார்குடி விரைவு ரயில் (வண்டி எண்.16179), சென்னை எழும்பூர் - மங்களூரு விரைவு ரயில் (16159), சென்னை எழும்பூர்- திருச்சி விரைவு ரயில் 12653) ஆகிய ரயில்கள் இன்று (1-ம் தேதி) முதல் 3-ம் தேதி வரை 3 நாட்களுக்கு எழும்பூர்-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எழும்பூர்- சேலம் அதிவிரைவு ரயில் (22153) இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னை கடற்கரை, வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, அரக்கோணம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். எனவே, இந்த ரயில் திருமால்பூர், செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நிற்காது.

புறநகர் ரயில் சேவைகள் ரத்து: சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 10.20, 11.05, 11.30, 11.59 மணி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இரவு 10.40, தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 10.40, 11.20, 11.40 செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே இரவு 10.10 மணிக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவைகள் இன்று முதல் 3-ம் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே இரவு 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று முதல் 3 நாட்களுக்கு தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்