ஆந்திர ரயில் விபத்து பலி 14 ஆக அதிகரிப்பு: ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதனை கிழக்கு கடற்கரை ரயில்வே உறுதி செய்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிக் கொண்ட இரண்டு ரயில்களிலுமே ‘கவச்’ பாதுகாப்பு அமைப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை ரயில்வே கோட்ட மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது.
கேரள குண்டுவெடிப்பு பலி 3 ஆக அதிகரிப்பு - என்எஸ்ஜி விசாரணை: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சிறப்பு ஜெபக் கூட்டத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இதில் படுகாயமடைந்த 17 பேரில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, சம்பவ இடத்தில் தேசிய பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்