செல்போனில் பறந்த ‘எமர்ஜென்சி அலர்ட்’ முதல் தொடரும் காசா துயரம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.20, 2023

By செய்திப்பிரிவு

அரசு மரியாதையுடன் பங்காரு அடிகளார் உடல் நல்லடக்கம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க, பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக பங்காரு அடிகளாரின் உடலுக்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மிகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத்தக்கது. . பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்" என்று அறிவித்திருந்தார். அதன்படி பங்காரு அடிகளார் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE