சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 25 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலருக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகபோனஸ் மற்றும் கருணைத்தொகை சேர்த்து 20 சதம் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த 2020-ம் ஆண்டு கரோனாவை காரணம் காட்டிபோனஸ் தொகை குறைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக கரோனா பேரிடர் இருந்த நிலையில். நிர்வாக நலன் கருதி 10 சதவீதம் போனஸை பெற்றுக் கொண்டோம். ஆனால், 2021-22-ம் ஆண்டும் 10 சதவீதமே வழங்கப்பட்டது.
எனவே, 2022-23-ம் ஆண்டுக்கு அவரவர் பெற்ற ஊதியத்தில் 25 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்க வேண்டுகிறோம். போனஸ் பட்டுவாடா சட்டத்தில் உள்ள ஊதியவரம்புகளை கணக்கில் கொள்ளாமல், முழுமையாக பெற்ற ஊதியத்துக்கு அனைத்து தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும்.
» மக்களை கேடயமாக பயன்படுத்த ஹமாஸ் தீவிரவாதிகள் திட்டம்: தாக்குதலை தாமதப்படுத்தும் இஸ்ரேல்
போனஸ் பட்டுவாடா சட்டத்திருத்தத்தின்படி 2021-22-ம் ஆண்டுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். தொழிற்சங்கங்களோடு பேச்சு நடத்தி போனஸ் தொகைமுடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.