திருநின்றவூர் - திருவள்ளூர் இடையே பொறியியல் பணி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில், திருநின்றவூர் - திருவள்ளூர் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்று (அக்.15) மாற்றம் செய்யப்பட உள்ளது.

மூர்மார்க்கெட் வளாகம் - அரக்கோணத்துக்கு இன்று (அக்.15) காலை 9.10, முற்பகல் 11, நண்பகல் 12.40 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள் பட்டாபிராம் - திருவள்ளூர் இடையேவிரைவு பாதையில் இயக்கப்படும் என்பதால், இவை பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை சாலை ஆகிய நிலையங்களில் நிற்காமல் செல்லும்.

மூர்மார்க்கெட் வளாகம் - திருவள்ளூருக்கு இன்று (அக்.15) காலை 9.15, 9.35, முற்பகல் 11.30, நண்பகல் 12.00, மதியம் 1 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள் பட்டாபிராம்-திருவள்ளூர் இடையே விரைவு பாதையில் இயக்கப்படும் என்பதால், பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய நிலையங்களில் நிற்காமல் செல்லும்.

மூர்மார்க்கெட் வளாகம் - திருத்தணிக்கு இன்று காலை 10, முற்பகல் 11.45 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய நிலையங்களில் நிற்காமல் செல்லும். சென்னை கடற்கரை - திருவள்ளூருக்கு இன்று காலை 9.55, மதியம் 1.05 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை நிலையங்களில் நிற்காமல் செல்லும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்