திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் மணல் குவாரியில் அமலாக்கத் துறை சோதனை

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்.12) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காவிரி, கொள்ளிடத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் மணல் அள்ளப்பட்டதாகவும், முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் மணல் குவாரிகள், குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் ஒரு மாதமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே மருவூர் கொள்ளிடம் ஆற்றில் புதன்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனர்.அப்போது பலத்த காற்று வீச தொடங்கியதால், ட்ரோனை பறக்கவிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சோதனை நடவடிக்கையை அலுவலர்கள் பாதியில் ரத்து செய்து திரும்பினர்.

இதைத்தொடர்ந்து, இன்று காலை முதல் திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத் துறை அலுவலர்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்டோர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மணல் குவாரியின் ஆழம், அகலம் உள்ளிட்டவற்றை அளவீடு செய்கின்றனர். இவர்களுக்கு மத்திய காவல் படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE