விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் 15-ம் தேதி வரை பகுதியளவில் ரத்து

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: பராமரிப்பு பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி முன் பதிவில்லா விரைவு ரயில் அக்.15-ம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில் வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, விழுப்புரத்தில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 16854) காட்பாடி - திருப்பதி இடையே அக். 15-ம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும். எதிர் வழித்தடத்தில் திருப்பதியில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும் திருப்பதி - விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 16853) திருப்பதி - காட்பாடி இடையே அக்டோபர் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4.40 மணிக்கு விழுப்புரத்துக்கு புறப்படும் என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்