பராமரிப்பு பணி காரணமாக செங்கல்பட்டு, அரக்கோணம் வழித்தடத்தில் மின்சார ரயில் சேவைகள் இன்றும், நாளையும் ரத்து

By செய்திப்பிரிவு

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் வழித் தடத்தில் இன்றும், நாளையும் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித் தடத்தில் உள்ள பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால், இன்றும், நாளையும் சில புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, சென்னை சென்ட்ரல்பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.35 மணி, சென்னை சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு 11.30 மற்றும் 11.45 மணி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே இரவு 11.55மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் இன்று (7-ம்தேதி) முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்- சென்ட்ரல் இடையேநாளை (அக்.8) அதிகாலை 3.20மணி, அரக்கோணம்-சென்ட்ரல் இடையே அதிகாலை 3.45, ஆவடி-சென்ட்ரல் இடையே அதிகாலை 3.50 மற்றும் 4 மணி, திருவள்ளூர்-சென்ட்ரல் இடையே அதிகாலை 3.50 மற்றும் 4.45 மணி, சென்ட்ரல்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே அதிகாலை 4.15, சென்ட்ரல்-திருவள்ளூர் இடையே அதிகாலை 4.30 மற்றும் 5.40 மணி,சென்ட்ரல்-அரக்கோணம் இடையே அதிகாலை 5.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், பட்டாபிராம்-சென்னை சென்ட்ரல் இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் ரயில், திருத்தணி-சென்னை சென்ட்ரல் இடையே இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆகியவை இன்று ஆவடி-சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுகிறது.

சென்னைசென்ட்ரல்-திருத்தணி இடையே நாளை அதிகாலை 3.50மணிக்கு இயக்கப்படும் ரயில், சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் இடையே அதிகாலை 5 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆகியவை சென்னை சென்ட்ரல்-ஆவடி இடையே ரத்து செய்யப்படுகிறது.

நாளை தாம்பரம் மார்க்கம்: இதேபோல், கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித் தடத்தில் மின்சார ரயில் சேவைகள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9.30 மணி, செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 9.40, 10.55, மதியம் 1 மணி, தாம்பரம்-கடற்கரை இடையே காலை 10.05, 10.15, 10.25, 10.55, 11.05, 11.35, 12.15, 12.45, 1.30, 1.45, 2.15, 4.30, கடற்கரை-தாம்பரம் இடையே காலை 10.30, 10.40, 10.45, 10.50,11.20, 11.25, 11.30, 11.40, 12.10, 12.20,12.40, 1, 1.30, 2.15, 2.30, கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11, 11.50, 12.30, 12.50, 1.45, திருமால்பூர்- கடற்கரை இடையே காலை 11.05, கடற்கரை-அரக்கோணம் இடையே 1 மணி இயக்கப்படும் ரயில் சேவைகள் நாளை (அக்.8)முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.

எனினும், பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-செங்கல்பட்டு இடையே நாளை காலை 11, 11.50, 12.30, 1, 1.45, 2.15 மணிக்கு ரயில் சேவைகள் இயக்கப்படும். இதேபோல், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே நாளை காலை 9.40,10.20, 10.55, 11.30, 12, 12.20, 1 மணிக்கு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்