‘ஒரு நூலகம் பல சிறைக் கதவுகளை மூடும்’ - மதுரை மத்திய சிறையில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேச்சு

By என். சன்னாசி

மதுரை: ‘ஒரு நூலகம் பல சிறைக்கதவுகளை மூடும் ’ என, மதுரை மத்திய சிறையில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பேசினார்.

மதுரை மத்திய சிறையில் காந்தி ஜெயந்தியையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் சிறைத்துறை டிஐஜி பழனி தலைமை வகித்தார். சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர், நடிகருமான கு.ஞானசம்பந்தன் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார். மேலும், கைதிகள் தயாரிக்கும் அங்காடி மற்றும் கைதிகள் மூலம் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து கூண்டுக்குள் வானம் என்ற நூலகத் திட்டத்திற்கு தான் எழுதிய புத்தகங்களை வழங்கினார்.

விழாவில் கு.ஞானசம்பந்தன் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றேன். புத்தங்கள் படிப்பதன் மூலம் நமது சிந்தனை, செயலை மாற்றிக்கொள்ள முடியும் என்பதை எடுத்துக்கூறினேன். இதைக்கேட்ட ஒருவர் விடுதலையாகி அவர் வீட்டின் ஒரு பகுதியை நுாலகமாக மாற்றியுள்ளார். ஒரு நுாலகம் பல சிறைக் கதவுகளை மூடும். சிறையில் இருந்த ஒருவர் நுாலகம் திறந்து பலரது வாழ்வை மாற்றியுள்ளார். கைதிகள் மன அழுத்தத்தை வரவழைக்ககூடாது என்பதற்காகதான் சிறையில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இன்று இங்கே பலர் மனம் விட்டு சிரித்துள்ளனர். சிறைச்சாலைக்குள் சென்று வந்ததுபோல் இன்றி தொழிற்சாலைக்கு வந்துவிட்டு சென்றது போல் இருக்கிறது. கைதிகள் பலர் திறமையால் பல்வேறு பொருட்களை தயாரிக்கின்றனர். இவற்றை மக்களுக்கு விற்பதும் வியப்பாகவே உள்ளது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE