திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - காணொலியில் நாளை நடக்கிறது

By செய்திப்பிரிவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி தொடர்பாக விவாதிக்க திமுக மாவட்ட செயலாளர், தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நாளை நடைபெறுகிறது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் அக்.1-ம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும். இதில் மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், அமைச்சர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில், மாவட்ட வாரியாக பூத் ஏஜென்ட்கள் நியமனம் தொடர்பாக சமீபத்தில் முதல்வர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார். இதுதவிர,தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமித்து, அந்தந்ததொகுதிகளில் பூத் ஏஜெண்டுகள் நியமனத்தை கண்காணிப்பதுடன், தொகுதி நிலவரத்தைஅறிந்து வைத்திருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந் தது.

இந்நிலையில், நாளை நடைபெறும் கூட்டத்தில், கூட்டணி கட்சிகள் செல்வாக்கு, திமுகவின் தனித்த செல்வாக்கு, கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் கொடுப்பது, வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE