சென்னை: சீர்மிகு நகர திட்டங்களை (ஸ்மார்ட்சிட்டி) சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தமிழகம் 2-வது இடத்துக்கான விருதுமற்றும் கோவை, தஞ்சாவூர்,தூத்துக்குடி மாநகராட்சிகளுக்கு சிறந்த மாநகரங்களுக்கான விருதை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் இந்திய சீர்மிகு நகர விருது போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 2022-ம் ஆண்டுக்கான விருது போட்டியில், தேசியஅளவில் 2-வது சிறந்த மாநிலமாகதமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து சீர்மிகு நகரங்களுக்கு இடையிலான போட்டியில், கோவை மாநகராட்சிக்கு தென்மண்டல அளவிலான நிதிமற்றும் செயல்திறனில் முதலிடம்,மாதிரி சாலைகள், ஏரிகள் புனரமைப்புக்காக தேசிய அளவில் முதலிடத்துக்கான விருது அறிவிக்கப் பட்டது.
» புதுச்சேரி மாநில பாஜக தலைவராக செல்வகணபதி எம்பி பொறுப்பேற்பு
» சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து - ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
அதேபோல் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மறுசீரமைப்பு மற்றும் நகரத்தின் அடையாளத்தை மேம்படுத்தும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தஞ்சாவூர் மாநகராட்சிக்கு தேசிய அளவில் 3-ம் இடத்துக்கான விருதும், கல்வியை மேம்படுத்துவதற்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு தேசிய அளவில் 3-வது இடத்துக்கான விருதும் கிடைத்துள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று முன்தினம் நடந்த, இந்திய சீர்மிகு நகர திட்ட விருது வழங்கும் விழாவில், 2-வது சிறந்தமாநிலமாகத் தேர்வு செய்யப்பட்ட தமிழகத்துக்கான விருதைகுடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். சிறந்த சீர்மிகு நகரங்களுக்கான விருதுகளை மாநகராட்சி மேயர்கள், அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.