திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

சென்னை: காய்ச்சல் காரணமாக விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் கடந்த 22-ம் தேதி நிறை வடைந்ததையடுத்து, கட்சிகட்சி நிகழ்ச்சிகளில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று வந்தார். இதற்காக அரியலூர், தஞ்சாவூர் என பல்வேறு ஊர்களுக்கு சென்றிருந்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சென்னையில் காங்கிரஸ் ஓபிசி பிரிவு சார்பாக நடந்தகருத்தரங்கில் பங்கேற்றார்.

பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு அனுமதிக்கப்பட்டார். அவசியம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், செப். 30-ம் தேதிவரை அவரை சந்திக்க தொண்டர்கள் வர வேண்டாம் என கட்சித்தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையே விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார். மருத்துவமனையில் இருந்து இன்று திருமாவளவன் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE