போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கான வட்டி குறைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தில் கடனுக்கான வட்டியை குறைப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூலை 25-ம் தேதி நடந்த பொதுப்பேரவையில் உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான கடனுக்கான ஒரு சதவீத வட்டி குறைப்பு வரும் அக்.1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதாவது தற்போது நடைமுறையில் இருக்கும் 13.5 சதவீத வட்டியானது 1 சதவீதம் குறைக்கப்பட்டு, 12.5 சதவீதமாக கணக்கிட்டு வரும் 1-ம்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE