மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது 7 வயது மகளுக்கு 2020-ல் வேலுசாமி என்பவர் பாலியல் துன்புறுத்தல் அளித்தார். இதுகுறித்து பரமக்குடி அனைத்துமகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, வேலுசாமியைக் கைது செய்தனர்.
இந்த வழக்கை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் விசாரித்து, வேலுசாமிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், எனதுமகளுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்குமாறு 2022 மார்ச் 17-ம் தேதி உத்தரவிட்டது. இழப்பீட்டுத் தொகையை ஒரு மாதத்துக்குள் வழங்குமாறு உத்தரவிட்டும், இதுவரை வழங்கவில்லை. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: பாதிக்கப்பட்ட சிறுமிக்கு,இழப்பீடு வழங்க உத்தரவிட்டு ஓராண்டாகியும், இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்காததை ஏற்க முடியாது. இந்த தாமதத்துக்காக உள்துறை முதன்மைச் செயலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தப் பணத்தை அவர் மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
» நெல்லை - சென்னை ‘வந்தே பாரத்’ ரயில்: கோவில்பட்டியில் நிற்க வைகோ வலியுறுத்தல்
» தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம்: ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தள்ளுபடி
கீழமை நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டுத் தொகையை 12 சதவீதவட்டியுடனும், வழக்கு செலவுத்தொகையையும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago