போக்சோ வழக்கில் இழப்பீடு தாமதம்: உள்துறை செயலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

By செய்திப்பிரிவு

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது 7 வயது மகளுக்கு 2020-ல் வேலுசாமி என்பவர் பாலியல் துன்புறுத்தல் அளித்தார். இதுகுறித்து பரமக்குடி அனைத்துமகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, வேலுசாமியைக் கைது செய்தனர்.

இந்த வழக்கை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் விசாரித்து, வேலுசாமிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், எனதுமகளுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்குமாறு 2022 மார்ச் 17-ம் தேதி உத்தரவிட்டது. இழப்பீட்டுத் தொகையை ஒரு மாதத்துக்குள் வழங்குமாறு உத்தரவிட்டும், இதுவரை வழங்கவில்லை. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: பாதிக்கப்பட்ட சிறுமிக்கு,இழப்பீடு வழங்க உத்தரவிட்டு ஓராண்டாகியும், இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்காததை ஏற்க முடியாது. இந்த தாமதத்துக்காக உள்துறை முதன்மைச் செயலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தப் பணத்தை அவர் மனுதாரருக்கு வழங்க வேண்டும்.

கீழமை நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டுத் தொகையை 12 சதவீதவட்டியுடனும், வழக்கு செலவுத்தொகையையும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்