அக்.14-ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா: சோனியா, மம்தாவுக்கு அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக மகளிரணி சார்பில், அக்.14-ம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பிருந்தா காரத் உள்ளிட்டோருக்கு திமுக மகளிரணி செயலாளரும், துணை பொதுச்செயலாளருமான கனிமொழி நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, இவர்கள் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார். சோனியா உள்ளிட்ட தலைவர்கள் வருகை குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE