திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சாலையில் பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்தனர்.
ஓணான்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 45 பேர் சில தினங்களுக்கு முன்பாக கர்நாடக மாநிலம் தர்மஸ்தாலாவுக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில், சுற்றுலா முடிந்து அனைவரும் வேனில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது வேன் பஞ்சராகி நின்றுள்ளது. அப்போது அதே சாலையில் வேகமாக வந்த லாரி வேன் மீது அதிவேகமாக மோதியுள்ளது.
இதில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த நபர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் சேர்ந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago