திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள திருவள்ளுவர் சாலையில் இன்று (செப்.6) மாலை திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலை பேவர் பிளாக் கற்களால் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இன்று (செப்.6) மாலை இப்பகுதியில் வசிக்கும் சிவக்குமாரின் வீட்டின் முன்பு உள்ள சாலை திடீரென பயங்கர சத்தத்துடன் உள்வாங்கியதில் 7 அடி ஆழத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.
இதைக் கண்டு அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவலறிந்து நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை ஆய்வு செய்தனர்.
» துணைவேந்தர் தேடுதல் குழுவில் முதல் முறையாக யுஜிசி பிரதிநிதியை சேர்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு
» “செந்தில் பாலாஜியை அமைச்சராக வைத்திருப்பதன் மர்மம் என்ன?” - அண்ணாமலை கேள்வி
இது குறித்து ஒட்டன்சத்திரம் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: “பள்ளம் ஏற்பட்ட பகுதியில் முன்பு செப்டிக் டேங்க் இருந்திருக்கலாம். அந்த வழியாக அதிக பாரத்துடன் வாகனம் சென்ற போது திடீரென பள்ளம் ஏற்பட்டிருக்கலாம். ஆய்வுக்கு பின் பள்ளம் குறித்து தெரிய வரும். சாலையை சீரமைக்கும் பணி நடக்கிறது” என்று தெரிவித்தனர்.