சேலம் | சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 6 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.

ஆம்னி வேன் மோதியதில் குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. சேலத்திலிருந்து ஈரோடு நோக்கி சென்ற ஆம்னி வேன், தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியதில், ஓட்டுநர் விக்னேஷ் மற்றும் பிரியா என்பவர் பலத்த காயமடைந்த நிலையில், செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி மற்றும் 1 வயது குழந்தை சஞ்சனா உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கொண்டலாம்பட்டியில் இருந்து பெருந்துறைக்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக சங்ககிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE