சென்னை: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் 48 சென்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் மீட்டனர்.
இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் ரூ.3.90 கோடி, ஈரோட்டில் ரூ.15 கோடி, திருப்பூரில் ரூ.10 கோடி என மொத்தம் ரூ.30.90 கோடி மதிப்பிலான 8 கோயில் சொத்துகளை ஒரே நாளில் அதிகாரிகள் மீட்டனர்