பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது

By செய்திப்பிரிவு

சென்னை: பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, ஓவியம், இசை,தையல், கைத்தொழில் ஆகிய ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது.

பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை இணைய வழியில் செப். 7-ம்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான காலிப் பணியிடவிவரங்களை செப்.5-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும்.

ஆசிரியர்கள் சுயவிருப்பத்தின் பேரில் மாறுதல் ஆணை பெறுவதால் இதை ரத்து செய்யவோ மாற்றம் செய்யவோ வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE