ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை

By செய்திப்பிரிவு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியை கடந்ததால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 4,000 கன அடியாக இருந்தது. காலை 10 மணி அளவில் விநாடிக்கு 6,000 கன அடியாகவும், 11 மணி அளவில் விநாடிக்கு 8,000 கன அடியாகவும் நீர்வரத்து உயர்ந்தது.

இந்நிலையில், மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. பிற்பகலில் விநாடிக்கு 8,000 கன அடியாக நீர்வரத்து கடந்த நிலையில் சுற்றுலா பயணிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE