சென்னை: தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெற தேர்வானவர்களுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்குகிறார்.
கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ், கோவை எஸ்.பி பத்ரி நாராயணன், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன், கரூர் ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோருக்கு தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மின் ஆளுமை முகமைக்கும் 2023-ம் ஆண்டுக்கான நல் ஆளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.