சென்னையில் இன்று கருணாநிதி நினைவு தின அமைதிப் பேரணி

By செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.

கருணாநிதியின் நூற்றாண்டு விழா மாநிலமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜூன் 3-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து அமைதிப் பேரணியாக சென்று, மெரினா நினைவிடத்தில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் கட்சியினர் மலரஞ்சலி செலுத்துகின்றனர்.

இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீடு மற்றும் சிஐடி நகரில் உள்ள வீட்டுக்கும் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE