33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை மாவட்ட எஸ்பிக்களாக உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

> சேலம் எஸ்பி சிவக்குமார் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

> திருச்சி எஸ்பியாக வருண் குமார் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார்.

> சேலம் எஸ்பியாக அருண் கபிலன் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார்.

> பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக இருந்த பொன்.கார்த்திக் குமார் அடையாறு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

> மயிலாடுதுறை எஸ்பியாக மீனா நியமிக்கப்படுகிறார்.

> பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி அன்கிட் ஜெயின் சென்னை தி.நகர் உதவி ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

> வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் பவன் குமார் ரெட்டி தாம்பரம் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக நியமனம்.

> சிவகங்கை எஸ்பியாக அரவிந்த் ஐபிஎஸ் நியமனம்.

> சென்னை தெற்கு போக்குவரத்து உதவி ஆணையர் சக்திவேல் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

> அடையார் உதவி ஆணையர் மகேந்திரன் சென்னை லஞ்ச ஒழிப்பு எஸ்பியாக நியமிக்கப்படுகிறார்.

> தாம்பரம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன், நாகை கடலோர பாதுகாப்புப் படை எஸ்.பி.யாக நியமிக்கப்படுகிறார்

> திருச்சி எஸ்.பி.யாக இருந்த சுஜித்குமார் மதுரை தெற்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

> காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி. ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக உதவி ஐ.ஜி.யாக நியமிக்கப்படுகிறார்.

இவர்கள் உட்பட 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE