ஈரோடு அருகே காவிரியில் மூழ்கி உயிரிழந்த 3 இளைஞர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வெங்கம்பூர், அ கிராமம் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் இன்று (ஆக.3) காலை கோயில் திருவிழாவுக்காக தீர்த்தம் எடுக்கச் சென்ற, கொடுமுடி, தட்டாம்பாளையம், கொண்டலாம்புதூர் பகுதியைச் சேர்ந்த குப்புராஜ் (19), ஜெகதீஸ்வரன் (18) மற்றும் சவுத்ரி (14) ஆகிய மூவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த இளைஞர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’ என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE