வரும் 24-ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டம், வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, தேமுதிக தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ளது.

கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமையகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் குறித்தும், கூட்டணி அமைப்பது குறித்தும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE