பொன்முடி வீட்டில் ED சோதனை முதல் புழல் சிறையில் செந்தில் பாலாஜி வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூலை 17, 2023

By செய்திப்பிரிவு

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் திங்கள்கிழமை அமலாக்கத் துறை சோதனை நடந்தது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் அவர் தொடர்புடைய இடங்களில் அதிகாலை முதலே இந்தச் சோதனை நடந்தது. அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி.யின் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

கடந்த 2006-11-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரத்தில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE