அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: மதுரை மாநாட்டின் லட்சினையை வெளியிட்டார் இபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், மதுரை மாநாட்டின் லட்சினையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்துகட்சிகளும் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. அதிமுக சார்பில் கடந்த சில மாதங்களாக உறுப்பினர் சேர்க்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன் முன்னேற்றத்தை மாதந்தோறும் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி கேட்டறிந்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, இன்று (ஜூலை 5) மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி தலைமை நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. மதுரையில் ஆக.20-ம் தேதி நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக தமிழகத்தின் அனைத்து நகர்ப்புறங்களிலும் மக்களுக்கு தெரிவிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், மதுரை மாநாட்டின் லட்சினையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE