தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு  9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், ராணிபேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE