1,021 மருத்துவர் பணி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,021 மருத்துவர் இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில்வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தி யாளர்களிடம் அவர் கூறியதா வது:

தமிழகத்தில் மருத்துவர்கள் பணிச்சுமையால் பாதிக்கப்படு கிறார்கள் என்ற கருத்து மிகவும் தவறானதாகும். மருத்துவ துறையில் காலியாக உள்ள 1,021 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டபோது, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதுவும் முடிவுக்கு வந்துள்ளது. 1,021 இடங்களுக்கு சுமார் 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். தமிழ் தேர்வு முடிவுகள் வெளி யிடப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவப் பணி யாளர் தேர்வாணையத்துக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இறுதி தேர்வு முடிவுகள் இன்னும் ஒருசில நாட்களில் வெளியிடப்படவுள்ளது. விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்