“பிரதமர் மீது அமித் ஷாவுக்கு என்ன கோபம்? ” - முதல்வர் ஸ்டாலின்: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் இரண்டு முறை தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பு பறிபோனதற்கு திமுகதான் காரணம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு, “வெளிப்படையாக இந்தக் கருத்தை அவர் கூறி இருந்தால் உரிய விளக்கம் அளிக்கப்படும். தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்ற கூறியது மகிழ்ச்சியாக உள்ளது. பிரதமர் மோடி மீது அமித் ஷாவுக்கு என்ன கோபம் எனத் தெரியவில்லை. 2024-ம் ஆண்டில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் ஆகியோர் உள்ளார்கள். ஒருவேளை இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்" என்று பதில் அளித்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்