தமிழசை பற்றி விமர்சனம்: வி.சி. பிரமுகரிடம் விசாரணை

பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை பற்றி விமர்சனம் செய்திருந்தார். இதனை கண்டித்து கடலூர் மாவட்டம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அக்கட்சியின் கடலூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் பால புதியவன் என்பவர் சமூக வலைதளங்களில் தமிழிசை பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருந்தாக பாஜகவினர் கடலூர் எஸ்பி விஜயகுமாரிடம் நேற்று புகார் அளித்தனர். இதையடுத்து கடலூர் புதுநகர் போலீஸார் நேற்றிரவு பால புதியவனை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். தகவல் அறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல்நிலையம் முன்பு திரண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE